×

பணம் பறித்த 3 பேர் கைது

சேலம், பிப்.2: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (40), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, கருப்பூர் டால்மியா போர்டு அருகே தனது பைக்கில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், சங்கரை மிரட்டி அவரிடம் இருந்து ₹1,200 பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதுபற்றி கருப்பூர் போலீசில் சங்கர் புகார் கொடுத்தார். எஸ்ஐ ரவி விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் குறித்து விசாரணை நடத்தினார்.
அதில், கருப்பூர் வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த சூர்யகுமார் (23), பாரதிநகரை சேர்ந்த பிரபாகரன் (20), கலைச்செல்வன் (20) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து, ₹600 பணத்தை மீட்டனர். பின்னர், கைதான 3 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post பணம் பறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Shankar ,Saminayakanpatti ,Omalur ,Salem district ,Talmiya Board ,Karuppur ,Dinakaran ,
× RELATED கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்...